Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் தீபத்தைத் தொடரந்து வைக்கவேண்டும் - அன் இதால்கோ!!

ஒலிம்பிக் தீபத்தைத் தொடரந்து வைக்கவேண்டும் - அன் இதால்கோ!!

8 ஆவணி 2024 வியாழன் 08:53 | பார்வைகள் : 2593


ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த பின்பும், ஒலிம்பிக் தீபம் ஏந்திய இராட்சத பலூனும், அதன் ஒலிம்பிக் தீபப்பீடமும் (vasque olympique) தொடர்ந்தும் துய்லரி பூங்காவிலேயே வைத்திருக்க வேண்டும் என்ற, கோரிக்கையை பரிசின் மாநகரபிதா அன் இதால்கோ விடுத்துள்ளார்.

இந்தக் கோரிக்கையைக் கடிதம் மூலம், ஜனாதிபதி எhனுவல் மக்ரோனிற்கு, அன் இதால்கோ அனுப்பி உள்ளார்.

இதன் பிரபலம் தொடர்ந்தும் உல்லாசப் பயணிகளை ஈர்க்கும் எனவும், தனது கோரிக்கையில் நகரபிதா தெரிவித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்