Paristamil Navigation Paristamil advert login

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து - 5 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து - 5 பேர் உயிரிழப்பு

8 ஆவணி 2024 வியாழன் 11:18 | பார்வைகள் : 1156


நேபாளத்தில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைநகர் காத்மண்டுவில் இருந்து புறப்பட்ட குறித்த ஹெலிகாப்டர் நாட்டின் வடமேற்கேயுள்ள மலைப்பாங்கான பகுதியில் இன்று (07) மதியம் விபத்துக்குள்ளானது.

விபத்தில் ஹெலிகாப்டர் விமானி உட்பட அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

ஹெலிகாப்டரில் பயணித்த 4 பேர், சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் மற்றொரு உடல் அடையாளம் காண முடியாதவாறு எரியுண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்