Paristamil Navigation Paristamil advert login

திருகோணமலையில் கரையொதுங்கிய லட்சக்கணக்கான நண்டுகள்

திருகோணமலையில் கரையொதுங்கிய லட்சக்கணக்கான நண்டுகள்

10 ஆவணி 2024 சனி 16:51 | பார்வைகள் : 1030


திருகோணமலை நகரில் உள்ள கடற்கரையில் இலட்சக்கணக்கான சிறு சிகப்பு நிறத்திலான நண்டுகள் இறந்த நிலையில் கரையொதுங்கி உள்ளன.

இன்று சனிக்கிழமை (10) அதிகாலை முதல்  நண்டுகள் இறந்த நிலையில் கரையொதுங்கி உள்ளன.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இப்பிரதேசத்துக்கு கூடுதலான சுற்றுலா பயணிகள் வருகின்ற நிலையில் இவ்வாறான நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

சுமார் ஐந்து தொடக்கம் ஆறு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கடற்கரையில் மூன்று தொடக்கம் 4 கிலோ மீட்டர் தூரம் வரை இவ்வாறான சிகப்பு நிற நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்