ராஜபக்ஷக்களை கைவிட்டு வந்தவர்கள் புது கட்சி ஆரம்பிக்கத் திட்டம்!

11 ஆவணி 2024 ஞாயிறு 15:47 | பார்வைகள் : 6102
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெற செய்யும் நோக்கில் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து பிரிந்து, ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்த தரப்பினால் இந்த புதிய கட்சி உருவாக்கப்படவுள்ளது.
இதன்படி, இந்த புதிய கட்சி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கின்றார்.