Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் கோர விபத்து - திருமண நிழ்விற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர்கள் மூவர் பலி

இலங்கையில் கோர விபத்து - திருமண நிழ்விற்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர்கள் மூவர் பலி

12 ஆவணி 2024 திங்கள் 12:23 | பார்வைகள் : 815


கொழும்பு - கண்டி வீதியில் வேவல்தெனிய பகுதியில் இன்று திங்கட்கிழமை (12) இடம்பெற்ற வாகன விபத்தில் 8 மாத குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் கெலிஓயா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்புகையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நிட்டம்புவவிலிருந்து கண்டி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாரதியின் கவனக்குறைவினால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்,  காயமடைந்த மூவரில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு,  ஒருவர் வறக்காப்பொல வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தங்கோவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்