Paristamil Navigation Paristamil advert login

நாளை சீரற்ற காலநிலை.. 42 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

நாளை சீரற்ற காலநிலை.. 42 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

12 ஆவணி 2024 திங்கள் 18:34 | பார்வைகள் : 2668


நாளை ஓகஸ்ட் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாட்டில் சீரற்ற காலநிலை நிலவும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.

பகல் நேரத்தில் மிக கடுமையான வெப்பமும், பிற்பகலின் பின்னர் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும் என எதிர் எதிர் காலநிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. பரிஸ் மற்றும் இல் து பிரான்ஸ் மாவட்டங்களில் நாளை கடுமையான வெப்பம் நிலவும் எனவும், அதிகபட்சமாக 38°C வரை வெப்பம் நிலவலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, Cantal, Puy-de-Dôme மற்றும் Haute-Loire ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணியின் பின்னர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்பம் மற்றும் மழை காரணமாக மொத்தமாக 42 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (விபரங்கள் கீழே உள்ள புகைப்பட்டத்தில்)

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்