Paristamil Navigation Paristamil advert login

Montreuil : குழு மோதலை தடுக்க முற்பட்ட காவல்துறை வீரர் மீது தாக்குதல்..!

Montreuil : குழு மோதலை தடுக்க முற்பட்ட காவல்துறை வீரர் மீது தாக்குதல்..!

12 ஆவணி 2024 திங்கள் 19:07 | பார்வைகள் : 2048


குழு மோதல் ஒன்றை தடுத்து நிறுத்த முற்பட்ட காவல்துறை வீரர் ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஓகஸ்ட் 10, சனிக்கிழமை இரவு இச்சம்பவம் Montreuil (Seine-Saint-Denis) நகரை ஊடறுக்கும் நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ளது. Boulevard Gabriel Péri மற்றும் Boulevard de la Boissière பகுதிகளை இணைக்கும் பகுதியில் ஒன்றுகூடிய இளைஞர்கள் பலர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

விரைந்து சென்ற காவல்துறையினர், மோதலில் ஈடுபட்டவர்களில் இருவரைம் கைது செய்தனர். ஆனால் அங்கு நின்றிருந்தவர்கள் காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இதில் காவல்துறை வீரர் ஒருவர் தலையில் காயமடைந்துள்ளார்.

பின்னர் அவர் தனது சேவைத் துப்பாக்கியினால் வானம் நோக்கி சுட்டு, அவர்களிடம் இருந்து தப்பித்துக்கொண்டார். மிகவும் மூர்க்கத்தனமான அவர்கள் தாக்குதல் மேற்கொண்டதில் குறித்த வீரர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்