Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் கடற்பயணம்... மூன்று நாட்களில் 800 இற்கும் மேற்பட்டவர்கள் மீட்பு..!

மீண்டும் கடற்பயணம்... மூன்று நாட்களில் 800 இற்கும் மேற்பட்டவர்கள் மீட்பு..!

14 ஆவணி 2024 புதன் 09:00 | பார்வைகள் : 1432


பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி செல்லும் அகதிகளின் முயற்சி தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 800 இற்கும் அதிகமானோர் இந்த சட்டவிரோத பயணத்தை மேற்கொண்டுள்ளனர். 

ஓகஸ்ட் 13, நேற்று செவ்வாய்க்கிமை Malo-les-Bains (Nord) நகர கடற்பிராந்தியத்தில் இருந்து சிறிய படகு ஒன்றில் பிரித்தானியா நோக்கி  50 பேர் பயணித்துள்ளனர். அவர்களை CROSS எனும் சட்டவிரோத கடற்பயணங்களைக் கண்காணிக்கும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அங்கிருந்து அவர்கள் Dunkerque கடற்கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரே இரவில் 700 பேரும், மறுநாள் திங்கட்கிழமை 98 பேரும், நேற்று செவ்வாய்க்கிழமை 50 பேரும் என கடந்த மூன்று நாட்களில் 848 பேர் கடற்பயணம் மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்