Paristamil Navigation Paristamil advert login

நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம் ஆகியவற்றை அதிகரிக்கும் காய்கறிகள் பற்றித் தெரியுமா?

நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம் ஆகியவற்றை அதிகரிக்கும் காய்கறிகள் பற்றித் தெரியுமா?

14 ஆவணி 2024 புதன் 15:40 | பார்வைகள் : 631


பருவமழையானது அதிக ஈரப்பதம் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக தொற்று, செரிமான பிரச்சனைகள் மற்றும் நோய்த்தொற்று ஆகியவற்றை கொண்டு வருகிறது. இந்த நேரத்தில் சில காய்கறிகள் நிறைந்த உணவை சாப்பிடுவது நமது ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும். ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளை உங்கள் உணவில் சேர்ப்பதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம் ஆகியவற்றை அதிகரிக்கும் மற்றும் பருவமழை தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கும். மழைக்காலத்தில் உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, உங்கள் மழைக்கால உணவில் நீங்கள் சேர்க்கக்கூடிய காய்கறிகளை பற்றி பார்ப்போம்.

பாகற்காய்: பாகற்காய் அதன் நச்சு நீக்கும் பண்புகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறனுக்காக அறியப்படுகிறது. இது கல்லீரல் மற்றும் இரத்தத்தை சுத்தப்படுத்த உதவுகிறது, பாகற்காய் ஆனது தொற்றுநோய்களின் ஆபத்து அதிகமாக இருக்கும் மழைக்காலங்களுக்கு ஏற்றதாகும்.

சுரைக்காய்: சுரைக்காய் எளிதில் ஜீரணிக்கக்கூடிய காய்கறியாக இருப்பதால், செரிமான பிரச்சனைகள் அதிகமாக இருக்கும் மழைக்காலத்திற்கு ஏற்றதாக அமைகிறது. மேலும் இதில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.

பீர்க்கங்காய்: பீர்க்கங்காயில் நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது, இது செரிமான பிரச்சனைகள் அதிகமாக இருக்கும் மழைக்காலத்திற்கு ஏற்றது.

கீரை: கீரை உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. கீரையில் உள்ள அதிக இரும்புச் சத்து, இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது, அதே நேரத்தில் நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கின்றன. மேலும், மழைக்காலத்தில் ஏற்படும் தொற்றுகள் மற்றும் சேதங்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன.


வெந்தய கீரைகள்:வெந்தய கீரைகள் ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளுக்கு பெயர் பெற்றவை. வெந்தய கீரைகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன, அவை மழைக்காலத்திற்கு சிறந்த தேர்வாக அமைகின்றன.

முருங்கைக்காய்: முருங்கைக்காய் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகளைக் கொண்டுள்ளது. முருங்கைக்காயில் உள்ள சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், சுவாச ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகின்றன, இது மழைக்காலத்திற்கு சிறந்த தேர்வாக அமைகின்றன.

கேரட்: கேரட்டில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை பார்வையை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. மேலும், கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ ஆனது ஆரோக்கியமான தோல் மற்றும் கண் பார்வையை மேம்படுத்துகிறது, இது மழைக்காலத்திற்கு சிறந்த தேர்வாக அமைகின்றன.

பீட்ரூட்: பீட்ரூட்டில் உள்ள அதிக இரும்புச்சத்து இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது, மேலும் அதன் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எனவே தொற்றுநோய்களின் ஆபத்து அதிகமாக இருக்கும் மழைக்காலங்களில் முக்கியமான காய்கறியாகும்.

பூசணி: பூசணிக்காயில் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. பூசணிக்காயில் உள்ள வைட்டமின்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன, அதே நேரத்தில் அதன் நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது.

வெண்டைக்காய்: வெண்டைக்காயில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி, ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது. வெண்டைக்காயில் அதிக நார்ச்சத்து உள்ளதால், செரிமானத்தை ஊக்குவிக்கிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துவதோடு, மழைக்காலங்களில் ஏற்படும் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்