Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி சூடு -  4 பேர் பலி

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கி சூடு -  4 பேர் பலி

23 புரட்டாசி 2024 திங்கள் 08:47 | பார்வைகள் : 276


அமெரிக்காவில் தலைவிரித்தாடும் துப்பாக்கி கலாச்சாரம் கொத்து கொத்தாக மக்களின் உயிர்களைப் பறித்து வரும் நிலையில் அலபாமா மாகாணத்தில் இன்று நடத்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும் டசன் கணக்கான மக்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆயுதமேந்திய மர்ம நபர்கள் நேற்று இரவு 11 மணியளவில் பிரம்பிங்கம் மாவட்டத்தில் உள்ள பைவ் பாயிண்ட்ஸ் [Five பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் நடைபாதையில் குண்டடிபட்டு மயக்கமாகக் கிடந்த இரண்டு ஆண்கள் மற்றும் பெண்ணை பார்த்துள்ளனர்.

மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் குண்டடிபட்ட மற்றொரு நபர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களை தேடும் பணியில் பொலிஸ் தீவிரம் காட்டி வருகிறது குறிப்பிடத்தக்கது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்