Paristamil Navigation Paristamil advert login

ஆர்த்திக்கு அட்வைஸ் கொடுத்த சுசித்ரா!

ஆர்த்திக்கு அட்வைஸ் கொடுத்த சுசித்ரா!

23 புரட்டாசி 2024 திங்கள் 14:21 | பார்வைகள் : 349


கடந்த 2009ம் ஆண்டு பிரபல நடிகர் ஜெயம் ரவிக்கும், பிரபல தொழிலதிபரின் அதிபரின் மகள் ஆர்த்திக்கு திருமணம் நடந்து முடிந்தது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த ஜோடி மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான் சில மாதங்களுக்கு முன்பு ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து, ஜெயம் ரவியின் புகைப்படங்கள் சிலவற்றை டெலீட் செய்ததாக கூறப்பட்டது. 

அதனை தொடர்ந்து விரைவில், இந்த ஜோடி விவாகரத்து செய்யப் போவதாகவும் தகவல்கள் வெளியானது. இருப்பினும் அந்த செய்தியை யாரும் பெரிய அளவில் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரும் மிகச் சிறந்த ஜோடிகளாக, மிகவும் அன்னியோன்யமான ஜோடியாக கடந்த 15 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருவதே அதற்கு காரணம். இந்த சூழலில் தான் சில வாரங்களுக்கு முன்பு அனைவரையும் திடுக்கிடவைக்கும் வண்ணம் ஒரு செய்தியை ஜெயம் ரவி வெளியிட்டார்.

அதில் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற இருப்பதாகவும், இனி அவருடன் இணைந்து வாழ போவதில்லை என்றும் ஒரு பரபரப்பு செய்தியை வெளியிட்டார். இந்த செய்தி வெளியாகி சில நாட்கள் கழித்து, ஜெயம் ரவி வெளியிட்ட அந்த செய்திக்கும் தனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றும். ஜெயம் ரவியோடு தான் இணைந்து வாழ விரும்புவதாகவும், ஆனால் அவரை சந்திக்க கடந்த சில வாரங்களாகவே முயற்சி செய்து வந்தும், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியுற்று வருவதாகவும் ஆர்த்தி ஒரு பதிவை வெளியிட்டார். 

அதன் பிறகு இவர்கள் இருவரிடையே பல மோதல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. குறிப்பாக ஆர்த்தியின் குடும்பத்தார் தான் ஜெயம் ரவியின் திரைப்படங்கள் அனைத்தையும் கையாளுவதாகவும், அவரை சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை என்றும், அந்த விஷயத்தை காரணம் காட்டி தான் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி பிரிய உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த சூழலில் தான் கெனிஷா பிரான்சிஸ் என்பவருடைய பெயர் அடிபட்டது  இவர் ஒரு சிறந்த பாடகி மட்டுமல்லாமல் மனநலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது. இவரோடு இணைந்து தான் ஜெயம் ரவி வாழ உள்ளதாகவும், அதனால் தான் ஆர்த்தியை பிரிக்கிறார் என்றும் சில வதந்திகள் பரவிய நிலையில், பொதுவெளியில் அதை மறுத்து, கெனிஷா மிகவும் நல்ல பெண், அவர் ஒரு மிகச் சிறந்த எண்ணத்தோடு மக்களுக்கு சேவையாற்றி வருகிறார். அவரோடு இணைந்து நான் செயல்பட விரும்புகிறேன், இருப்பினும் இப்படி எங்களை பற்றி கொச்சையான எந்த வார்த்தைகளையும் பேச வேண்டாம் என்று பகிரங்கமாக ஜெயம் ரவி பேசியிருந்தார். 

இந்த சூழலில் பொதுவாகவே சர்ச்சைகளை அள்ளித் தெளிக்கும் பாடகி சுசித்ரா, ஜெயம் ரவி விவகாரத்தில் அவருடைய மனைவி ஆர்த்திக்கு ஒரு அட்வைஸ் ஒன்றை கொடுத்திருக்கிறார். அதாவது ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தியை பிரிய முதல் காரணமே கெனிஷா பிரான்சிஸ் தான் என்றும், ஒரு பப்பில் பாடகியாக இருப்பது மட்டுமல்லாமல் மனநலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பவர் என்றும் கூறியுள்ளார் சுசித்ரா.

தன்னுடைய twitter பக்கத்தில் கூட "மெண்டல் ஹெல்த் அட்வகேட்" என்று தான் தன்னை (Kenishaa Francis) அவர் குறிப்பிட்டு இருப்பதாகவும் கூறி இருக்கிறார் சுசித்ரா. Ayahuasca என்று முறையை பயன்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறார் கொனிஷா, ஆனால் இது இந்தியா போன்ற சில நாடுகளில் தடை செய்யப்பட்ட ஒன்று என்றும் சுசித்ரா கூடியிருக்கிறார். 

மேலும் அவர் ayahuasca என்ற மருந்தை கொனிஷா தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு பயன்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். (இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை) இந்த மருந்தை பயன்படுத்தி தான் கொனிஷா பல விஷயங்களை செய்து வருவதாகவும். ஆகவே தனது கணவர் ரவியை, ஆர்த்தி  கண்ணகி போல போராடி மீட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் சுசித்ரா.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்