Paristamil Navigation Paristamil advert login

லெபனான் மீது தரைவழி தாக்குதல் - இஸ்ரேலின் பாதுகாப்பு அதிகாரி

லெபனான் மீது தரைவழி தாக்குதல் - இஸ்ரேலின் பாதுகாப்பு அதிகாரி

26 புரட்டாசி 2024 வியாழன் 16:23 | பார்வைகள் : 726


லெபனான் மீது தரைவழி தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகிவருவதாக  முப்படை பிரதானி மேஜர் ஜெனரல்  ஹெர்ஜி ஹலேவி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மேற்கொண்டுள்ள வான்வெளிதாக்குதல்கள்  ஹெஸ்புல்லா அமைப்பின் உட்கட்டமைப்பினை அழிப்பதை நோக்கமாக கொண்டவை என தெரிவித்துள்ள அவர் இந்த தாக்குதல்கள் இஸ்ரேல் எல்லையை கடந்து தாக்குதல்களை மேற்கொள்வதற்கு உதவும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் வடபகுதியில் படையினர் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் நாங்கள் ஒரு இராணுவநடவடிக்கைக்கு தயாராகிவருகின்றோம் இதன் அர்த்தம் என்னவென்றால் உங்களின் இராணுவகாலணிகள் எதிரியின் பகுதிக்குள் நுழையும்,என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் பொதுமக்கள் மீதான தாக்குதல்களிற்காக ஹெஸ்புல்லா அமைப்பு இராணுவநோக்கங்களிற்காக தயார்படுத்தியுள்ள கிராமங்களிற்குள் உங்கள் இராணுவ காலணிகள் நுழையும் என இஸ்ரேலின் உயர் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்