Paristamil Navigation Paristamil advert login

Philippine கொலை வழக்கு... ஜனாதிபதி மக்ரோன் வெளியிட்ட கருத்து..!!

Philippine கொலை வழக்கு... ஜனாதிபதி மக்ரோன் வெளியிட்ட கருத்து..!!

27 புரட்டாசி 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 6667


19 வயதுடைய Philippine எனும் இளம் பெண் கொலை செய்யப்பட்டு, Bois de Boulogne பூங்காவில் புதைக்கப்பட்டிருந்தார். ஒட்டுமொத்த பிரான்சையே உலுக்கிய இச்சம்பவம் இடம்பெற்று இன்று வெள்ளிக்கிழமையுடன் ஆறு நாட்கள் ஆகின்றன.

இந்நிலையில், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், நேற்று வியாழக்கிழமை இச்சம்பவம் தொடர்பில் தனது கோபத்தினையும், கவலையினையும் வெளியிட்டார். 'ஒட்டுமொத்த தேசத்தையும் உடைந்துபோகச் செய்திருக்கிறது இச்சம்பவம். அவரின் குடும்பத்தினரின் வலி மதிக்கப்படவேண்டியது மற்றும் அவர்கள் ஆதரவளிக்கப்படவேண்டியவர்கள்! அனைவரது உணர்வுகளோடும் நான் இணைந்துகொள்கிறேன்!' என ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.

அதேவேளை, 'நிச்சயம் சட்டம் கடமையைச் செய்யும். ஒவ்வொரு நாளும் பிரெஞ்சு பிள்ளைகள் பாதுகாக்கப்படவேண்டியவர்கள். நாங்கள் சொல்வது குறைவு.. ஆனால் ஒவ்வொரு நாளும் செயற்பட்டு வருகிறோம்!' எனவும் அவர் தெரிவித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்