Paristamil Navigation Paristamil advert login

Essonne : பாடசாலை மாணவனுக்கு சுத்தியல் தாக்குதல்...!!

Essonne : பாடசாலை மாணவனுக்கு சுத்தியல் தாக்குதல்...!!

28 புரட்டாசி 2024 சனி 17:05 | பார்வைகள் : 394


பாடசாலை மாணவர்களுக்கிடையே இடம்பெற்ற குழு மோதல் ஒன்றில் மாணவன் ஒருவர் சுத்தியலால் தாக்கப்பட்டுள்ளார்.

Montgeron (Essonne) நகரில் உள்ள lycée Rosa-Parks எனும் உயர்கல்வி பாடசாலையில் இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதில் சுத்தியல் ஒன்றினால் மாணவன் ஒருவனின் தலையில் தாக்கப்பட்டதில், மிக மோசமாக காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். இந்த மோதல் விவகாரம் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.  

கல்வி அமைச்சர் Anne Genetet "ஏற்றுக்கொள்ள முடியாத நிகழ்வு" என தெரிவித்துள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்