Paristamil Navigation Paristamil advert login

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று வெளியேறும் போட்டியாளர் யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று வெளியேறும் போட்டியாளர்  யார்?

7 ஐப்பசி 2024 திங்கள் 06:06 | பார்வைகள் : 594


பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக தொடங்கிய நிலையில், விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார் என்பதும், 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர் அவர்களில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்.ஜே.ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சவுந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 9 பேர், பெண்கள் 9 பேர் என சரிசமமாக உள்ளதால் பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் ஆக இந்த சீசன் மாறி உள்ளது. அதாவது ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் நடக்கும் ஆட்டமே பிக்பாஸ் தமிழ் சீசன் 8.

இந்த 18 போட்டியாளர்களில் ஒருவர் 24 மணி நேரத்திற்குள்ளாக எலிமினேட் செய்யப்பட உள்ளார். அவர் யார் என்பதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் குழப்பத்தில் இருக்கின்றனர். ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியை முதல் முறையாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இதற்காக அவருக்கு ரூ.60 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அதில், எலிமினேஷனுக்காக ஒவ்வொரு போட்டியாளரும் மற்றவர்களை நாமினேட் செய்கின்றனர். 24 மணி நேரத்திற்குள்ளா நடக்கும் முதல் எவிக்‌ஷனில் சத்யா, ஜாக்குலின், அர்னவ், ரவீந்தர் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இவர்களில் ஒன்று ரவீந்தர் எலிமினேட் செய்யப்பட வேண்டும், இல்லையென்றால் விஜய் சேதுபதியின் மகளாக வந்த சாச்சனா நேமிதாஸ் எவிக்‌ஷன் செய்யப்பட வேண்டும். இவர்களைத் தவிர் மற்றவர்கள் விஜய் டிவி பிரபலங்கள், இன்னும் சிலர் கானா பாடகர், பேச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.ஆதலால், ரவீந்தர் சந்திரசேகர் அல்லது சாச்சனா நேமிதாஸ் ஆகியோரில் யாரேனும் ஒருவர் எலிமினேட் செய்யப்பட வாய்ப்புகள் இருக்கிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்