Paristamil Navigation Paristamil advert login

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வர்த்தகர் கைது!

7 ஐப்பசி 2024 திங்கள் 15:12 | பார்வைகள் : 8135


சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குப் பெருந்தொகையான இலத்திரனியல் சிகரெட்டுகளை கொண்டு வந்த வர்த்தகர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துக் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். 

 
சந்தேக நபரிடம் இருந்து 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 1,105 இலத்திரனியல் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நீர்கொழும்பு - பெரியமுல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே குறித்த இலத்திரனியல் சிகரெட்டுகளை நாட்டுக்குக் கொண்டு வந்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்