Paristamil Navigation Paristamil advert login

தென் கிழக்கு மாவட்டங்களில் மழை.. வெள்ள எச்சரிக்கை..!!

தென் கிழக்கு மாவட்டங்களில் மழை.. வெள்ள எச்சரிக்கை..!!

7 ஐப்பசி 2024 திங்கள் 15:40 | பார்வைகள் : 1862


பிரான்சின் தென் கிழக்கு மாவட்டங்களில் கடும் மழை பெய்யும் எனவும், வெள்ள அனர்த்தம் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஒன்பது மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Loire, Rhône, Ain, Isère, Saône-et-Loire, Jura, Ardèche, Gard மற்றும் Lozère ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று ஒக்டோபர் 7, திங்கட்கிழமை மாலை முதல் நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி வரை மழை பதிவாகும் எனவும், 150 தொடக்கம் 200 மி.மீ வரை மழை பதிவாகும் எனவும் வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்