Paristamil Navigation Paristamil advert login

ஐஸ்வர்யா - தனுஷு மீண்டும் இணைகிறார்களா?

ஐஸ்வர்யா - தனுஷு  மீண்டும் இணைகிறார்களா?

8 ஐப்பசி 2024 செவ்வாய் 08:06 | பார்வைகள் : 334


கோலிவுட் திரை உலகில், தன்னுடைய தந்தை மற்றும் அண்ணன் செல்வராகவன் உதவியோடு 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் தனுஷ். இவரின் முதல் படம் வெற்றிப்படமாக அமைந்த போதிலும், தோற்றத்தின் காரணமாக அதிக அளவிலான விமர்சனங்களுக்கு ஆளானார். ஆனால் அந்த விமர்சனங்களை தன்னுடைய வெற்றி படிக்கட்டுகளாக மாற்றி, மிக குறுகிய காலத்தில் பல தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட, இளம் நடிகராக மாறினார்.

திரை உலக பயணத்தில்.... முன்னணி இடத்தை நோக்கி வளர்ந்து கொண்டிருந்த தனுஷ், 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம், திரையுலகமே மெச்சும் அளவுக்கு மிக பிரமாண்டமாக நடந்தது. இதில் ஏராளமான அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின்னர் நடிகர் என்பதைத் தாண்டி, பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என தன்னுடைய பன்முகத் திறமையை திரையுலகில் வெளி காட்டிய தனுஷ்... தமிழ் படங்கள் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க துவங்கினார்.

தனுஷ் ஐஸ்வர்யா ஜோடிக்கு யாத்ரா - லிங்கா என இரண்டு மகன்கள் உள்ள நிலையில், ஐஸ்வர்யாவும் தனுஷும் கடந்த 2022 ஆம் ஆண்டு... இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனம் ஒற்று பிரிந்து செல்ல உள்ளதாக அறிவித்தனர்.

தனுஷ் ஐஸ்வர்யாவை மீண்டும் சேர்த்து வைக்க ஒரு வருடத்திற்கு மேலாக இரு வீட்டு தரப்பில் இருந்தும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்ட நிலையில், ஐஸ்வர்யா - தனுஷ் இருவருமே தங்களுடைய முடிவில் தீர்மானமாக இருந்தனர்.  மேலும் இவர்களுடைய குழந்தைகளும் இவர்களின் முடிவுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து, அம்மா - அப்பா என இருவரிடமும் மாறி மாறி வசித்து வருகின்றனர்.

ஸ்மூத்தாக சென்று கொண்டிருந்த தனுஷ் - ஐஸ்வர்யா தங்களின் வாழ்க்கையில் விவாகரத்து பெற்று பிரியும் முடிவை எடுத்ததற்கான பல காரணங்கள் யூகத்தின் அடிப்படையில் சமூக வலைதளத்தில் வெளியானாலும், இதுவரை ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவருமே தங்களுடைய விவாகரத்துக்கான காரணத்தை ஒரு முறை கூட கூறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு விவாகரத்துக் கூறி ஐஸ்வர்யா தனுஷ் நீதிமன்றத்தை நாடிய நிலையில்... இருவருக்குமான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், ஐஸ்வர்யா தனுஷ் இருவருமே நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால் இந்த வழக்கை அக்டோபர் 19ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக நீதிபதி அறிவித்தார். இதைத்தொடர்ந்து இருவருக்குமே விவாகரத்தில் உடன்பாடு இல்லையா? என சில பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில் அக்டோபர் 19ஆம் தேதி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்