இன்றும் தொடரும் சீரற்ற காலநிலை.. ஐந்து மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
7 புரட்டாசி 2024 சனி 08:02 | பார்வைகள் : 11466
நேற்று மாலை முதல் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவிவருகிறது. இன்று சனிக்கிழமை காலை மீண்டும் அங்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை மற்றும் வெள்ளம் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு மாவட்டங்களாக Hautes-Pyrénées, Dordogne, Corrèze, Creuse மற்றும் Haute-Vienne ஆகிய மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை (vigilance orange) விடுக்கப்பட்டுள்ளது.
Landes மற்றும் Pyrénées-Atlantiques மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளது.
அதேவேளை, இன்று சனிக்கிழமை நாட்டின் பெரும்பான்மையான நகரங்களில் மழை பெய்யும் எனவும், தலைநகர் பரிஸ் உட்பட இல் து பிரான்ஸ் மாகாணத்திலும் மழை பெய்யும் எனவும், மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan