ஒலிம்பிக் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட பெண்களின் சிலைகள் பாராளுமன்றத்தில் பார்வைக்கு..!
13 புரட்டாசி 2024 வெள்ளி 09:56 | பார்வைகள் : 16564
ஒலிம்பிக் ஆரம்ப நாள் நிகழ்வின் போது 10 பெண்களின் உருவச் சிலை சென் நதியில் காட்சிப்படுத்தப்பட்டது. அவர்களின் இந்த சிலைகள் விரைவில் தேசிய பாராளுமன்றத்தில் (l'Assemblée nationale) காட்சிப்படுத்தப்பட உள்ளது.
செப்டம்பர் 23 ஆம் திகதியில் இருந்து ஒக்டோபர் 5 ஆம் திகதி வரை அவை காட்சிப்படுத்தப்பட உள்ளன. அவற்றை பார்வையிடுவதற்கான நுழைவுச் சிட்டைகள் விரைவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளன.
முன்னதாக, ஒலிம்பிக் போட்டிகளின் போது பயன்படுத்தப்பட்ட வெள்ளிக்குதிரை பரிஸ் நகரசபையில் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan