Paristamil Navigation Paristamil advert login

காட்டுத் தீ பரவும் அபாயம்... மூன்று மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

காட்டுத் தீ பரவும் அபாயம்... மூன்று மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

15 புரட்டாசி 2024 ஞாயிறு 10:00 | பார்வைகள் : 1188


காட்டுத்தீ பரவு அபாயம் காரணமாக நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

செப்டம்பர் 15, இன்று ஞாயிற்றுக்கிழமை Hérault, Aude மற்றும் Pyrénées-Orientales மாவட்டங்களில் காட்டுத் தீ பரவும் வாய்ப்புள்ளதாகவும், இது தொடர்பில் விழிப்பில் இருக்கும்படியும்  Météo-France அறிவித்துள்ளது. அங்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, Gard, Drôme, Vaucluse மற்றும் Bouches-du-Rhône ஆகிய மாவட்டங்களிலும் இந்த ஆபத்து இருப்பதாகவும், அங்கு குறைந்தபட்ச எச்சரிக்கையான மஞ்சள்  நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

Météo-France தெரிவிக்கையில், பத்தில் 9 காட்டுத் தீ பரவலும் மனிதர்களே காரணம் என குறிப்பிட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்