Paristamil Navigation Paristamil advert login

மதுவிலக்கு ரத்து; பீகாரை கலக்கும் பிரசாந்த் கிஷோர்; தேர்தலில் புது வாக்குறுதி!

மதுவிலக்கு ரத்து; பீகாரை கலக்கும் பிரசாந்த் கிஷோர்; தேர்தலில் புது வாக்குறுதி!

15 புரட்டாசி 2024 ஞாயிறு 14:49 | பார்வைகள் : 409


பீகார் தேர்தலில் வெற்றி பெற்றால் ஒரு மணி நேரத்திற்குள் மதுவிலக்கை ரத்து செய்வேன் வருவேன் என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் உறுதியளித்துள்ளார்.

பூரண மது விலக்கு என்ற கொள்கையை வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பேசி வரும் நிலையில், இருக்கும் மதுவிலக்கை ரத்து செய்வேன் என்று கூறி வருகிறார் புது கட்சி தலைவரான பிரசாந்த் கிஷோர்.

ஜன் சுராஜ் என்ற தனது அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ள இவர், 'மாநிலத்தில் தற்போது உள்ள மதுவிலக்கு கட்டுப்பாடுகள் பயனற்றது. அது சட்டவிரோதமாக மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய வழிவகுத்தது மற்றும் மாநிலத்திற்கு ரூ. 20,000 கோடி கலால் வருவாயை இழந்து இருக்கிறது' என்று கூறியுள்ளார்.

பிரசாந்த் கிஷோர் மேலும் கூறியதாவது:மாநிலத்தில் தற்போது உள்ள மது மீதான தடையானது நிதீஷ் குமாரின் போலித்தனத்தை காட்டுகிறது. மேலும் மதுவிலக்கு சட்டத்திற்குப் புறம்பாக மதுவை வீடுகளுக்கு டெலிவரி செய்ய வழிவகுத்தது . நான் அக்டோபர் 2 ஆம் தேதி ஜன் சுராஜ் என்ற புதிய கட்சியைத் தொடங்குகிறேன். பீகாரில் ஆட்சிக்கு வந்தால் ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை நீக்கிவிடுவேன் என்றார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்