பிரபல இசையமைப்பாளருடன் மீண்டும் இணையும் செல்வராகவன்..

16 புரட்டாசி 2024 திங்கள் 14:50 | பார்வைகள் : 4911
பிரபல இயக்குனர் செல்வராகவன் பெரும்பாலும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து பணிபுரிந்த நிலையில் இரண்டு படங்களில் மட்டுமே அவர் ஜிவி பிரகாஷ் உடன் பணிபுரிந்தார்.
இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது மீண்டும் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து அவர் பணிபுரிய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் உருவான ’காதல் கொண்டேன்’ ’7ஜி ரெயின்போ காலனி’ ’புதுப்பேட்டை’ உள்பட பல படங்களில் யுவன்சங்கர் ராஜா இசை அமைத்த நிலையில் ’ஆயிரத்தில் ஒருவன்’ மற்றும் ’மயக்கம் என்ன’ ஆகிய இரு படங்களுக்கு மட்டுமே ஜிவி பிரகாஷ் இசை அமைத்தார். இந்த இரண்டு படங்களில் இடம்பெற்ற பாடல்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் செல்வராகவன் மற்றும் ஜிவி பிரகாஷ் கூட்டணி இணையுள்ளது. இது குறித்து அறிவிப்பை ஜீவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் ’புதிய ஸ்கிரிப் மற்றும் புதிய புரொஜெக்ட், செல்வராகவன் அவர்களுடன் இணைந்துள்ளேன். ஒரு புதிய பயணம் காத்திருக்கிறது’ என்று அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ஜிவி பிரகாஷ்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1