Paristamil Navigation Paristamil advert login

200 யானைகளை அழிக்க திட்டம் -  ஜிம்பாப்வே அதிரடி முடிவு

200 யானைகளை அழிக்க திட்டம் -  ஜிம்பாப்வே அதிரடி முடிவு

18 புரட்டாசி 2024 புதன் 16:23 | பார்வைகள் : 907


தீவிர வறட்சி காரணமாக 200 யானைகளை அழிக்க ஜிம்பாப்வே திட்டமிட்டுள்ளது.

நான்கு தசாப்தங்களில் மிக மோசமான வறட்சியை எதிர்கொண்டுள்ள ஜிம்பாப்வே, தனது மக்களுக்கு உணவு வழங்க உதவுவதற்காக 200 யானைகளை அழிக்க திட்டமிட்டுள்ளது.

ஜிம்பாப்வேவின் இந்த முடிவு, அண்டை நாடான நமீபியா தீவிர வறட்சியின் காரணமாக 83 யானைகள் உள்பட 160 வனவிலங்கு பிராணிகளை அழிக்க இருப்பதாக அறிவித்ததை தொடர்ந்து வெளிவந்துள்ளது.

எல் நினோவால்(El Niño) ஏற்பட்ட வறட்சி காரணமாக தெற்கு ஆபிரிக்கா பேரழிவுக்குள்ளாக்கியுள்ளது. இதனை தொடர்ந்து ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய இரண்டு நாடுகளும் அவசர நிலை அறிவித்துள்ளன.

வறட்சியால் பிராந்தியத்தில் 68 மில்லியன் மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர், இதன் விளைவாக தீவிர உணவு பற்றாக்குறை மற்றும் மோசமான நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.

ராய்ட்டர்ஸிடம் ஜிம்பாப்வே பார்க்ஸ் அண்ட் வைல்டுலைஃப் அத்தாரிட்டி (Zimparks) இன் செய்தித் தொடர்பாளர் தினாஷே ஃபாராவோ வழங்கிய தகவலில், நாடு முழுவதும் சுமார் 200 யானைகளை அழிக்க திட்டமிட்டுள்ளோம் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும் இது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்து நாங்கள் விவரங்களை உருவாக்கி வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.


வறட்சியால் பாதிக்கப்பட்ட ஜிம்பாப்வே சமூகங்களுக்கு யானை இறைச்சி விநியோகிக்கப்படும் என்பதையும் ஃபாராவோ உறுதிப்படுத்தினார்.

1988க்குப் பிறகு ஜிம்பாப்வே யானைகளை அழிப்பது இதுவே முதல் முறையாகும்.


தோராயமாக 200,000 யானைகள் ஜிம்பாப்வே, சாம்பியா, போட்ஸ்வானா, அங்கோலா மற்றும் நமீபியா ஆகிய ஐந்து தெற்கு ஆப்பிரிக்க நாடுகளை கொண்ட பாதுகாப்புப் பகுதியில் வாழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்