Paristamil Navigation Paristamil advert login

லெபனாவில்  வெடித்துச் சிதறிய வாக்கி டாக்கிகள் - 3 பேர் பலி

லெபனாவில்  வெடித்துச் சிதறிய வாக்கி டாக்கிகள் - 3 பேர் பலி

19 புரட்டாசி 2024 வியாழன் 08:28 | பார்வைகள் : 454


லெபனானில் 18-09-2024 வாக்கி டாக்கி கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு லெபனான் மற்றும் பெய்ரூட்டின் புறநகர் பகுதிகளில் அதிக வெடிப்புகள் பதிவாகியுள்ளன.

இச்சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 100 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

18 ஆம் திகதி வெடித்துச் சிதறிய வாக்கி டாக்கி கருவிகளையும்,  17-09-2024 வெடித்த பேஜர் கருவிகளையும் சுமார் 5 மாதங்களுக்கு முன்பு ஹிஸ்புல்லா அமைப்பினர் இறக்குமதி செய்ததாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல்களின் பின்னணியில் இஸ்ரேலின் உளவு அமைப்பான 'மொசாட்' இருக்கலாம் என ஹிஸ்புல்லா அமைப்பினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இஸ்ரேல் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்