Yvelines : சென் நதியில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு.. கணவர் கைது!!

3 கார்த்திகை 2024 ஞாயிறு 12:33 | பார்வைகள் : 6363
சென் நதியில் இருந்து பெண் ஒருவரது சடலம் இன்று நவம்பர் 3, ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. அப்பெண் கொல்லப்பட்டு சென் நதியொ வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
53 வயதுடைய பெண் ஒருவரது சடலமே இன்று காலை Louveciennes (Yvelines) நகரை ஊடறுக்கும் சென் நதியில் இருந்து மீட்கப்பட்டது. அப்பெண் அவரது கணவரால் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அப்பெண் இரு நாட்களுக்கு முன்னர் அவரது தோழியை தொடர்புகொண்டு உரையாடிய போது, மிகவும் மனச்சோர்வுடன் இருந்ததாகவும், அதன் பின்னர் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்து அவரது தோழி காவல்துறையினரை அழைத்துள்ளார்.
அதன் பின்னரே அப்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1