ஜெர்மனியில் பயணிகள் தொடருந்தில் பாரிய தீ விபத்து

4 கார்த்திகை 2024 திங்கள் 09:45 | பார்வைகள் : 6406
ஜெர்மனியில் தலைநகர் பேர்லினின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு தொடருந்து நிலையத்தில் பயணிகள் தொடருந்தில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பெர்லின் மற்றும் பிராண்டன்பர்க் இடையே எல்லையில் உள்ள அஹ்ரென்ஸ்ஃபெல்டே நிலையத்திற்கு தீயணைப்பு வீரர்கள் அழைக்கப்பட்டனர்.
மூன்று பெட்டிகள் கொண்ட தொருந்து அதன் அடுத்த பயணத்தை வெர்னியூசென் நகரத்திற்குத் தொடங்கவிருந்தபோது தொடருந்தில் சத்தம் செவிமடுக்கப்பட்டதை ஓட்டுனர் அவதானித்தார்.
அதனைத் தொடர்ந்து புகை எழுந்து தீப்பிழப்புகள் வெளிவருதை அவதானித்தார். தொடருந்தில் இருந்த ஐந்து பயணிகளும் ஓட்டுநரும் பெண் உதவியாளரும் வெளியேற்றப்பட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். அதற்கும் தொடருந்து எரிந்து பெரும் தேசத்தை ஏற்பட்டுத்தியது.
இந்த ரயிலை Niederbarnimer Eisenbahn (NEB) என்ற தனியார் நிறுவனம் இயக்கியது.
Berlin-Ostkreuz மற்றும் Werneuchen இடையே RB25 வரியை இயக்குகிறது.
தீ அணைக்கும் வரை மத்தியில் தொடருந்து நிலையம் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12:30 மணி வரை மூடப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும் முதற்கட்ட விசாரணையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1