Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் காசாவில் 44 பேர், லெபானில் 33 பேர் பலி!

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் காசாவில் 44 பேர், லெபானில் 33 பேர் பலி!

14 கார்த்திகை 2024 வியாழன் 08:30 | பார்வைகள் : 3679


இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் காசாவில் 44 பேர், லெபானில் 33 பேர் பலி!

இஸ்ரேல் நாடானது காசா மற்றும் லெபனான் மீது பாரிய தாக்குதலை நடத்தி வருகின்றது.

இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா முனையிலும், ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனானிலும் தாக்குல் நடத்திய வருகிறது.

காசா முனையில் கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்தப்பட்ட இஸ்ரேலின் வான்தாக்குதலில் 44 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட மனிதாபிமான பகுதி என அறிவிக்கப்பட்ட பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

லெபனான் நாட்டின் தெற்கு பெய்ரூட் பகுதிகளில் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்