Paristamil Navigation Paristamil advert login

நோர்து-டேம் தேவாலயத்தின் நிர்மானிக்கப்பட உள்ள கன்னிமாதா திருவுருவச்சிலை!!

நோர்து-டேம் தேவாலயத்தின் நிர்மானிக்கப்பட உள்ள கன்னிமாதா திருவுருவச்சிலை!!

15 கார்த்திகை 2024 வெள்ளி 09:36 | பார்வைகள் : 5608


நோர்து-டேம் தேவாலயத்தின் திறப்பு விழாவுக்கு இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், திறப்புவிழாவுக்குரிய ஆயத்தப்பணிகள் இடம்பெற்று வருகிறது.   

அதன் ஒரு பகுதியாக, இன்று நவம்பர் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அங்கு கன்னிமாதா திருவுருவச்சிலை நிர்மானிக்கப்பட்ட உள்ளது. கைகளில் குழந்தையை ஏந்திக்கொண்டு காட்சியளிக்கும் கன்னிமாதா சிலை அங்கு நிறுவப்பட உள்ளது.

2019 ஆம் ஆண்டு தீவிபத்துக்குள்ளாகி சேதமடைந்திருந்த நோர்து-டேம் தேவாலயம், ஐந்து வருட புனரமைப்பின் பின்னர், அடுத்தமாதம் (டிசம்பர்) 7 ஆம் திகதி திறக்கப்பட உள்ளது. இந்த தேவாலயத்தில் உள்ள காண்டாமணிகள் கடந்தவாரத்தில் பரிசோதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்