சிவப்பாகும் தேவாலயங்கள்!!

17 கார்த்திகை 2024 ஞாயிறு 12:30 | பார்வைகள் : 10964
தேவையில், அல்லது துன்பத்தில் உள்ள தேவாலயங்களிற்கான உதவி என்ற அர்த்தத்திலான AED ( l'Aide à l'Eglise en Détresse) என்ற ஒரு மதசார் அமைப்பானது சிவப்பு வாரம் ஒன்றினை அறிவித்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 17ம் திகதியில் இருந்து 24ம் திகதிவரை, சிவப்பு வாரம் («REDWEEK») ஒன்றினை AED அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் அடக்கு முறைகளிற்கு உள்ளாகும் கிறிஸ்தவர்களிற்கு ஆதரவகவே இந்த சிவப்பு வாரம் அனுட்டிக்கப்படுகின்றது.
உலகம் முழுவதும் 365 மில்லியன் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டும், அடக்குமுறைக்குள்ளாகி வருதாகவும், முக்கியமாக புர்க்கினோபாசோ, அஜர்பைஜான், ஆர்மீனியா, மிக மோசமாக பாக்கிஸ்தான், மற்றும் பல நாடுகளில் கிறிஸ்தவரகள் அடக்குமுறைக்கு உள்ளாகின்றனர் என இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பிரான்சில் நோத்ரதாம். சக்ரகேர்-து-மொன்மார்த் மற்றும் லூர்து தேவாலயங்கள் இந்த வாரம் சிப்பு நிறத்தில் ஒளிர உள்ளன.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025