Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : மிதிவண்டியில் சென்றவரை மோதித்தள்ளிய மகிழுந்து! - வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்தது!

பரிஸ் : மிதிவண்டியில் சென்றவரை மோதித்தள்ளிய மகிழுந்து! - வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்தது!

16 ஐப்பசி 2024 புதன் 07:00 | பார்வைகள் : 975


மிதிவண்டியில் பயணித்த ஒருவருக்கும் - SUV மகிழுந்தில் பயணித்த ஒருவருக்கும் இடையே எழுந்த வாய்த்தர்க்கம் கொலையில் சென்று முடிவடைந்துள்ளது. தலைநகர் பரிசில் நேற்று ஒக்டோபர் 15, செவ்வாய்க்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

8 ஆம் வட்டாரத்தின் Boulevard Malesherbes பகுதியில் இச்சம்பவம் மாலை 5.45 மணிக்கு இடம்பெற்றது. மிதிவண்டியில் பயணித்த 27 வயதுடைய ஒருவருக்கும், SUV மகிழுந்து ஒன்றில் பயணித்த ஒருவருக்கும் இடையே வீதியில் வைத்து வாக்குவாதம் எழுந்துள்ளது.

சில நிமிடங்களின் பின்னர், மிதிவண்டிக்கு என ஒதுக்கப்பட்ட சாலையில் அவர் பயணித்த போது, குறித்த SUV அவரை பின்னால் சென்று இடித்து விழுத்தி அவர் மீது ஏறிச் சென்றுள்ளது. இச்சம்பவத்தில் மிதிவண்டி நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.

52 வயதுடைய சாரதி உடனடியாக கைது செய்யப்பட்டார். சம்பவத்தின் போது அவரது மகள் வாகனத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்