Paristamil Navigation Paristamil advert login

அரசியலில் ஓய்வு கிடையாது - மகிந்த அறிவிப்பு

அரசியலில் ஓய்வு கிடையாது - மகிந்த அறிவிப்பு

16 ஐப்பசி 2024 புதன் 10:04 | பார்வைகள் : 234


அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ராஜபக்சக்கள் தற்காலிக விலகல் ஒன்றையே மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கேள்வி – தேர்தல் ஏற்பாடுகள் எப்படி உள்ளன?

” தயாராக உள்ளோம்.”

கேள்வி – பொதுஜன பெரமுனவின் வெற்றி எவ்வாறு உள்ளது?

“வெற்றி மிக எளிதாக உள்ளது.”

கேள்வி – நீங்கள் ஓய்வு பெறுகிறீர்களா? தற்காலிக விலகலா?

‘‘தற்காலிக… அரசியல்வாதி ஓய்வு பெறுவதில்லை.

கேள்வி – ஜனாதிபதியின் உரையை நீங்கள் செவிமடுத்தீர்களா? முதன்முறையாக இக்குழுவினர் ஓய்வு பெறுகின்றனர் என்றார். நீங்கள் அதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

“இல்லை, நான் கேட்கவில்லை.. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. “

ராஜபக்ஷக்கள் தேர்தலில் போட்டியிடவில்லை என்று சமூகக் கருத்து உருவாகியுள்ளது தானே?

“ஷசீந்திர ராஜபக்ஷ மொனராகலின் கேட்கிறார். 113 இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்