சீரற்ற காலநிலை.. 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

17 ஐப்பசி 2024 வியாழன் 07:08 | பார்வைகள் : 9642
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 13 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை, வெள்ளம் மற்றும் சில இடங்களில் புயல் வீசவும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது. பிரான்சின் தெற்கு மாவட்டங்களில் இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும்,
Alpes-Maritimes, Ardèche, Aveyron, Corrèze, Gard, Loire, Haute-Loire, Lot, Lozère, Pyrénées-Atlantique, Tarn, Aude ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக தெற்கு பகுதிகளில் தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சில இடங்களில் மணிக்கு 90 கி.மீ வேகம் வரை புயல் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025