Paristamil Navigation Paristamil advert login

லெபனானில் தாக்குதலை நிறுத்துமாறு வலியுறுத்தல் - ஜனாதிபதி மக்ரோன்!

லெபனானில் தாக்குதலை நிறுத்துமாறு வலியுறுத்தல் - ஜனாதிபதி மக்ரோன்!

18 ஐப்பசி 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 649


லெபனான் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி இஸ்ரேலினை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.

'லெபனானின் தரைவழி யுத்த நடவடிக்கைகளை நீட்டிக்கக்கூடாது. இறையான்மையை மதிக்கவேண்டும். அங்கு யுத்த நடவடிக்கைகளைக் கைவிடவேண்டும்.' என மக்ரோன் வலியுறுத்தினார்.

மேலும், "லெபனான் மற்றும் அதன் இறையான்மையை பாதுகாக பிரான்ஸ் தொடர்ந்தும் செயற்படும். அங்கு மனிதாபிமான உதவிகளை தொடர்ந்து வழங்கி மக்களைப் பாதுகாக்கும். அதேவேளை ஹிஸ்புல்லா அமைப்பினர் தங்களது ஆயுதங்களை துறக்கவேண்டும்!" எனவும் அவர் தெரிவித்தார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்