நீதித்துறைக்கு சவால் விடுகிறார் நித்தியானந்தா: ஐகோர்ட் மதுரை கிளை

22 ஐப்பசி 2024 செவ்வாய் 14:01 | பார்வைகள் : 5244
நித்தியானந்தா தலைமறைவாக இருந்து கொண்டு நீதித்துறைக்கு சவால் விடுகிறார் என ஐகோர்ட் மதுரை கிளை கூறியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 45 ஏக்கர் நில மோசடி தொடர்பாக நித்தியானந்தாவின் சீடர் சுரேகா என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த ஐகோர்ட் கிளை கூறியதாவது: நித்தியானந்தா தலைமறைவாக இருந்து கொண்டு நீதித்துறைக்கு சவால் விடுகிறார். பல்வேறு வழக்குகளில் அவருக்கு எதிராக பிடிவாரன்ட் உள்ளது. ஆனால், அவர் நீதிமன்றத்திற்கு வருவது இல்லை. அவர் தலைமறைவாக இருந்து கொண்டு நீதிமன்றத்தை இயக்குகிறாரா? அவரது சொத்துகளை இந்திய நீதித்துறை பாதுகாக்க வேண்டுமா? எனக்கேள்வி எழுப்பிய கோர்ட் எங்கள் தலையீடு இல்லை என உறுதி மொழி தாக்கல் செய்தால் முன்ஜாமின் குறித்து பரிசீலனை செய்யப்படும் என உத்தரவிட்டார்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1