பாரம் தாங்காமல் மூழ்கிய படகு.. மூன்று அகதிகள் பலி!

23 ஐப்பசி 2024 புதன் 15:30 | பார்வைகள் : 9952
பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணித்த படகு ஒன்று மூழ்கியதில், மூவர் பலியாகியுள்ளனர்.
இன்று ஒக்டோபர் 23, புதன்கிழமை அதிகாலை இச்சம்பவம் பாது கலே கடற்கரையில் இருந்து 2 கடல் கிலோமீற்றர் தூரத்தி இடம்பெற்றுள்ளது. சிறிய காற்று நிரப்பிய படகு ஒன்றில் 50 வரையான அகதிகள் பயணித்த நிலையில், படகு பாரம் தாங்காமல் கடலில் மூழ்கியுள்ளது. கடற்படையினர் உதவிக்கு அழைக்கப்பட்டு, அவர்கள் மீட்கப்பட்டனர்.
45 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மூவர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர். இருவர் தேடப்பட்டு வருகின்றனர். அகதிகளில் பலர் பாதுகாப்பு மேலங்கி அணிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் இதுபோன்ற கடற்பயணங்களில் இதுவரை 50 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1