Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்

இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்

23 ஐப்பசி 2024 புதன் 16:17 | பார்வைகள் : 5061


பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் உள்ள சில சுற்றுலாப் பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலியர்களுக்கு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு சபை இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

அறுகம் வளைகுடா பகுதி மற்றும் இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கில் உள்ள கடற்கரைகள் தொடர்பான குறித்த எச்சரிக்கையானது, "சுற்றுலாப் பகுதிகள் மற்றும் கடற்கரைகளை மையமாகக் கொண்ட பயங்கரவாத அச்சுறுத்தல் பற்றிய சமீபத்திய தகவலின் அடிப்படையில்" விடுக்கப்பட்டது என்று நிறுவனம் கூறியது.

பாதுகாப்பு கவுன்சில் அச்சுறுத்தலின் சரியான தன்மையை குறிப்பிடவில்லை மற்றும் இலங்கையின் மற்ற பகுதிகளில் உள்ள இஸ்ரேலியர்களை எச்சரிக்கையாக இருக்குமாறும், பொது இடங்களில் பெரிய கூட்டங்களை நடத்துவதை தவிர்க்குமாறும் அழைப்பு விடுத்துள்ளது.

"இஸ்ரேலிய பாதுகாப்பு ஸ்தாபனம் ... இலங்கையில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதுடன் நிலைமை தொடர்பிலான முன்னேற்றங்களை பின்பற்றி வருகிறது" என்று தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்