Paristamil Navigation Paristamil advert login

Noisy-Champs : தொடருந்து நிலையத்துக்குள் பாய்ந்த மகிழுந்து!

Noisy-Champs : தொடருந்து நிலையத்துக்குள் பாய்ந்த மகிழுந்து!

23 ஐப்பசி 2024 புதன் 16:28 | பார்வைகள் : 879


மகிழுந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தொடருந்து நிலையத்துக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

இன்று ஒக்டோபர் 23, புதன்கிழமை இச்சம்பவம் Noisy-Champs (Seine-Saint-Denis) தொடருந்து நிலையத்தில் இடம்பெற்றது. நண்பகலுக்கு சற்று முன்னதாக தொடருந்து நிலையத்தை நோக்கி வந்த மகிழுந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாகச் சென்று தொடருந்து நிலையத்தின் முகப்பு கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துள்ளது.

அதிஷ்ட்டவசமாக இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. ஆனால் இச்சம்பவத்தினால் Noisy-le-Grand–Mont d'Est - Torcy நிலையங்களுக்கிடையிலான RER A சேவை சிறிதுநேரம் தடைப்பட்டது.

(தொடருந்து சேவைகள் சில நிமிடங்களிலேயே மீண்டும் இயக்கப்பட்டது)

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்