Paristamil Navigation Paristamil advert login

கனடாவின் பிரதமர்  4 நாட்களுக்குள் பதவி விலக வேண்டும்!

கனடாவின் பிரதமர்  4 நாட்களுக்குள் பதவி விலக வேண்டும்!

25 ஐப்பசி 2024 வெள்ளி 08:41 | பார்வைகள் : 811


கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 4 நாட்களுக்குள் பதவி விலக வேண்டுமென எம்.பி.க்கள் கெடு விதித்துள்ளதாக கூறப்படுகின்றது.

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியின் செல்வாக்கு மக்களிடையே சரிந்து வருகிறது.

இது கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் எதிரொலித்தது. இடைத்தேர்தல் நடந்த 2 முக்கிய தொகுதிகளிலும் லிபரல் கட்சி தோல்வியை சந்தித்தது.

இந்த தோல்விக்கு பிரதமர் ட்ரூடோ தான் காரணம் என குற்றம் சாட்டிய லிபரல் கட்சி எம்.பி.க்கள் சிலர் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இந்நிலையில் லிபரல் கட்சி எம்.பி.க்கள் ரகசிய கூட்டத்தை நடத்யதுடன் , பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டுமென எம்.பி.க்கள் அதிருப்தி வலியுறுத்தினர்.

4 நாட்களுக்குள் (அக்.28) ட்ரூடோ பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதம் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதோடு ட்ரூடோ மீண்டும் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.     

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்