Paristamil Navigation Paristamil advert login

இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் கொட்டித்தீர்த்த மழை!!

இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் கொட்டித்தீர்த்த மழை!!

25 ஐப்பசி 2024 வெள்ளி 10:10 | பார்வைகள் : 1083


இன்று ஒக்டோபர் 25,  வெள்ளிக்கிழமை காலை முதல் நாட்டின் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. 

Var, Gard ஆகிய இரு மாவட்டங்களுக்கும் இன்று சீரற்ற காலநிலை காரணமாக 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Bouches-du-Rhône மாவட்டத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக Var மாவட்டத்தின் Vidauban நகரில் இரண்டு மாதங்களில் பெய்யவேண்டிய மழை கடந்த 3 மணிநேரங்களின் கொட்டித்தீர்த்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஒருமணிநேரத்தில் 190 மி.மீ மழை பெய்துள்ளதாக வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது. 

பல்வேறு வெளியேற்றங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், தீயணைப்பு படையினர் பல்வேறு மீட்புப்பணிகளில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்