Paristamil Navigation Paristamil advert login

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் புதிய CEO அறிவிப்பு

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் புதிய CEO அறிவிப்பு

5 மார்கழி 2024 வியாழன் 13:46 | பார்வைகள் : 2819


அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் அடுத்த தலைமை செயல் அதிகாரியாக டோட் கிரீன்பெர்க் தெரிவிக்கப்பட்டுள்ளார். 

நிக் ஹாக்லி (Nick Hockley) தற்போது அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயலை அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். 

இவரது பதவிக்காலம் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அடுத்த CEO ஆக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள டோட் கிரீன்பெர்க் (Todd Greenberg) நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

53 வயதான டோட் கிரீன்பெர்க், "அவுஸ்திரேலிய விளையாட்டில் இந்த மகத்தான முக்கிய பங்கை வகிக்கும் வாய்ப்பை வழங்கியதற்கு நன்றியுள்ளனவாக இருக்கிறேன். 

தற்போதைய நிர்வாகத்தின் பணிக்கு நன்றி. விளையாட்டில் வலுவான அடிப்படைகள் உள்ளன. அவுஸ்திரேலிய கிரிக்கெட் தொடர்ந்து செழித்து வர இந்த வேகத்தை நாங்கள் உறுதிசெய்ய விரும்புகிறேன்" என்றார்.    

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்