ஐவரி கோஸ்ட் நாட்டில் கோர விபத்து - 26 பேர் பலி
7 மார்கழி 2024 சனி 13:50 | பார்வைகள் : 5786
மேற்கு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்டில் உள்ள Brokoua என்ற கிராமத்தில், இரண்டு சிறிய ரக பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகின.
இதனால் பேருந்துகள் தீப்பற்றி எரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் சிக்கிக்கொண்ட 26 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 28 பேர் காயமடைந்தனர்.
போக்குவரத்து அமைச்சகம் விபத்து குறித்த விவரங்களை வெளியிட்டது. அத்துடன் இந்த பேரழிவு நிகழ்வின் பின்னணியில் உள்ள காரணங்களை கண்டறிய விசாரணையை தொடங்குவதாகும் உறுதிப்படுத்தியது.
அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி இறந்த 26 பேரில் 10 பேர் தீயில் கருகி பலியாகினர்.
ஐவரி கோஸ்டில் மோசமான சாலை உள்கட்டமைப்பு, பரவலான கவனக்குறைவாக வாகனம் ஓட்டும் பழக்கம் ஆகியவற்றால் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan