ஜெர்மனியில் அதிகமாக வருகை தரும் சுற்றுலாப்பயணிகள்

12 மார்கழி 2024 வியாழன் 15:13 | பார்வைகள் : 4648
ஜெர்மனியில் 2024ஆம் ஆண்டில், பொருளாதார பிரச்சினைகள் நிலவிய நிலையிலும், வரலாறு காணாத அளவில் சுற்றுலாப்பயணிகள் வருகை புரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2019 ஆம் ஆண்டில், கொரோனா காலகட்டத்துக்கு முன் ஜெர்மனிக்கு வருகை புரிந்த சுற்றுலாப்பயணிகளைக் காட்டிலும், 2024 இல் ஜெர்மனிக்கு சுற்றுலா வந்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளதாக, ஜெர்மன் பெடரல் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், 433 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் ஜெர்மனியில் ஒரு இரவாவது தங்கியுள்ளார்கள் என்கின்றன தரவுகள்.
ஐரோப்பிய சுற்றுலாவின் பிரபலமான மாதமான ஆகத்து மாதத்தில் மட்டுமே, இந்த ஆண்டில், 59 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் ஜெர்மனியில் தங்கியுள்ளார்கள்.
2019இல், ஆகத்து மாதத்தில் ஜெர்மனியில் தங்கிய சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை, 58.8 மில்லியன் ஆகும்.
ஆக, இது ஒரு வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1