Paristamil Navigation Paristamil advert login

ரஷ்ய கடற்படை தளத்தில் அரங்கேறிய பயங்கர வெடிப்பு சம்பவங்கள்

ரஷ்ய கடற்படை தளத்தில் அரங்கேறிய பயங்கர வெடிப்பு சம்பவங்கள்

21 மார்கழி 2024 சனி 05:51 | பார்வைகள் : 3201


ரஷ்யாவின் ஆர்க்டிக் கடற்படை தளத்திற்கு அருகில்  இரண்டு பாரிய வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

Murmansk, Safonovo மற்றும் Severomorsk நகரங்களின் மக்களால் இந்த வெடிப்புகளின் அதிர்வுகள் உணரப்பட்டன.

Severomorsk-ல் அமைந்துள்ள ரஷ்யாவின் முக்கிய ஆர்க்டிக் கடற்படை தளம் மற்றும் இரு ராணுவ விமான தளங்களின் அருகே இந்த நிகழ்வுகள் நடந்துள்ளன.

இந்த பகுதிகளில் ரஷ்யாவின் முக்கிய ராணுவ வசதிகள் உள்ளதால், இதற்கு என்ன காரணம், யார் காரணம் என்பதில் குழப்பம் நிலவுகிறது.


Militarnyi செய்தி நிறுவனத்தின் படி, இந்த தளம் ரஷ்யாவின் ஆர்க்டிக் பகுதிகளில் ஆட்சி செய்யும் திறனை உறுதிப்படுத்துகிறது.

இந்த வெடிப்புகள் ஆயுத களஞ்சியத்தில் ஏற்பட்டதாக இருக்கலாம் என சிலர் கருதுகின்றனர்.

ராணுவ நிபுணர் யான் மட்வேவ், வெடிப்புகள் மின் சதி அல்லது ஆயுதங்களை அகற்றும்போது ஏற்பட்டதாக இருக்கலாம் என்று கூறுகிறார்.  

சிலர் அதில் ஆளில்லா விமான பயன்பாடு இருக்கலாம் என்றும் கூறினாலும், வெடிப்புகளின் விதம் அதற்கு மாறாக உள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முர்மான்ஸ்க் தளம் ஆர்க்டிக் கடல் பாதையை கட்டுப்படுத்துவதில் முக்கியமாக செயல்படுகிறது.   

இது ரஷ்ய அணு நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு ஆதரவளிக்கிறது மற்றும் Zircon ஏவுகணைகளின் பரிசோதனையும் இங்கு நடைபெறுகிறது.

வெடிப்புக்குப் பிறகு, ரஷ்யா உக்ரைனின் தலைநகரான கீவை நோக்கி ஏவுகணைகளை வீசியுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான யுத்தத்தை மேலும் தீவிரமாக்கலாம் எனக் கூறப்படுகிறது.    

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்