புதிய நகரபிதா.. முன்னாள் பிரதமர் கப்ரியல் அத்தாலை விரும்பும் பரிஸ் மக்கள்!!

18 கார்த்திகை 2024 திங்கள் 14:45 | பார்வைகள் : 9288
நகரசபை தேர்தல் வரும் 2026 ஆம் ஆண்டு இடம்பெற உள்ளது. பரிசுக்கான அடுத்த நகரபிதாவாக வரப்போகிறவர் யார் என்பது தொடர்பில் அறிந்துகொள்ள பரிஸ் மக்கள் ஆர்வமாக உள்ளனர். பல்வேறு கருத்துக்கணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போதைய நகரபிதா ஆன் இதால்கோ மற்றும் அவருடன் பதவிக்கு போட்டியிடும் Rachida Dati ஆகியோரது பெயர்ப்பட்டியலில் புதிதாக முன்னாள் பிரதமர் கேப்ரியல் அத்தால் இணைந்துள்ளார்.
தற்போது மேற்கொண்ட புதிய கருத்துக்கணிப்பில் 42% சதவீதமான மக்கள் கேப்ரியல் அத்தாலினை நகரபிதாவாக விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.