Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

சங்கு பூவில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரின் ஆரோக்கிய நன்மைகள்...!

சங்கு பூவில் இருந்து தயாரிக்கப்படும்  தேநீரின் ஆரோக்கிய நன்மைகள்...!

18 கார்த்திகை 2024 திங்கள் 14:45 | பார்வைகள் : 4836


ப்ளூ டீ என்பது butterfly pea பூக்களை அதாவது சங்கு பூக்களை வெந்நீரில் ஊற வைத்து தயாரிக்கப்படும் ஹெர்பல் டீ ஆகும். இதில் இருக்கும் அதிகப்படியான அந்தோசயனின் சங்குப்பூ டீதே-க்கு பிரகாசமான நீல நிறத்தையும், மருத்துவ குணங்களையும் வழங்குகிறது. இந்த டீ இதயம், மூளை ஆரோக்கியம் மற்றும் நீரிழிவு எதிர்ப்பு மற்றும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகள் ஆகியவற்றைக் கொண்டது. பருவமழை மற்றும் குளிர்காலங்களில் பல உடல்நலப் பிரச்சனைகள் நம்மை தாக்குகின்றன. இது போன்ற சமயங்களில் நீல சங்கு பூவில் இருந்து தயாரிக்கப்படும் டீ குடிப்பது நல்ல பலன்களை தரும்.

இதய ஆரோக்கியம்: ஜீ நியூஸ் அறிக்கையின்படி, சங்கு பூ டீயில் ஆண்டிஹைபர்லிபிடெமிக் பண்புகள் உள்ளன, அவை இதயத் தமனிகளில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ராலைக் கரைக்கும்.

இந்த ப்ளூ டீயை வழக்கமாக உட்கொள்வது இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

சங்கு பூவில் இருந்து தயாரிக்கப்படும் தேயிலைக்கு வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பை கரைக்கும் திறன் உள்ளது. இதனால் உடல் பருமனை குறைக்க உதவுகிறது.

ப்ளூ டீயில் உள்ள ஆன்டி-கிளைகோஜன் வயதாதைத் தடுக்கிறது. இது சருமம் மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
இளமை: ப்ளூ டீயில் உள்ள ஆன்டி-கிளைகோஜன் வயதாதைத் தடுக்கிறது. இது சருமம் மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

அழற்சி எதிர்ப்பு பண்புகள், நுரையீரல் வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் சுவாச பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இது பயன்படுகிறது. காய்ச்சல் மற்றும் உடல்வலியை குணப்படுத்தவும் இது உதவுகிறது.

ப்ளூ டீ குடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது மற்றும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை வெறும் வயிற்றில் ப்ளூ டீ குடிப்பது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

தேநீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மன அழுத்தத்தைப் போக்க உதவுவதுடன், உடலையும், மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் திறன் கொண்டவை. இது மனதை அமைதிப்படுத்துவதுடன் தூக்கமின்மையை சமாளிக்கவும் உதவுகிறது.

ரத்த ஓட்டம்: சங்கு பூ டீயில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் பண்புகள் நிறைந்துள்ளன. இதனால் உடலில் ஆக்ஸிஜன் அளவு அதிகரித்து, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கத் தேவையான ஆற்றலை உடலுக்குத் தருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்