ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் ஏழாவது முறையாக வெடித்த எரிமலை

21 கார்த்திகை 2024 வியாழன் 13:50 | பார்வைகள் : 5175
ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் மீண்டும் எரிமலை வெடித்தது.
தென்மேற்கு ஐஸ்லாந்தில் எரிமலையில் இரவு 11.14 மணியளவில் சிறிய வெடிப்பு தொடங்கியது.
பின்னர் 3 கிலோமீற்றர் நீளத்திற்கு ஒரு பிளவை உருவாக்கியது.
தலைநகர் ரெய்க்ஜாவிக்கின் தென்மேற்கே சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கிரின்டாவிக் அருகே, மீண்டும் மீண்டும் எரிமலை வெடிப்புகள் உள்கட்டமைப்பு மற்றும் சொத்துக்களை சேதப்படுத்தியது. இங்கு 3,800 மக்கள் வசிக்கின்றனர்.
இதனால் பல குடியிருப்பாளர்கள் தங்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க கட்டாயப்படுத்தப்பட்டனர்.
RUVயின் படி, பிரபலமான Blue Lagoon resortயில் சிவில் பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கையை வழங்கியதை அடுத்து, சுமார் 50 வீடுகள் காலி செய்யப்பட்டன.
இந்த வெடிப்பு கடந்த ஆகத்து மாதத்தில் நிகழ்ந்த முந்தைய வெடிப்பை விட கணிசமாக சிறியதாக மதிப்பிடப்பட்டுள்ளது என, நில அதிர்வு நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஐஸ்லாந்தின் வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், வெடிப்பினால் விமானப் பயணத்திற்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை.
அருகில் உள்ள நகரமான கிரிண்டாவிக் உட்பட தீபகற்பத்தின் சில பகுதிகளில் வாயு வெளியேற்றம் குறித்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1