2025 ல் ஏற்படப்போகும் மிகப்பெரிய பேரழிவு - புதின் குறித்து பாபா வாங்காவின் அச்சுறுத்தும் கணிப்பு!
30 கார்த்திகை 2024 சனி 11:32 | பார்வைகள் : 6120
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குறித்து பாபா வங்காகூறியுள்ள கணிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
பல்கேரியாவில் 1911 ஆம் ஆண்டு பாபா வங்கா பிறந்தார்.
இவரது இயற்பெயர் வாங்கேலிய பாண்டேவ டிமித்ரோவா என்பதாகும்.
தன்னுடைய 12 வயதில் பார்வை இழந்த அவர் நிகழ்வுகளை கணிக்க கூடிய சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக பயங்கரவாத தாக்குதல்கள், இளவரசி டயானாவின் மரணம், செர்னோபில் பேரழிவு மற்றும் பிரெக்ஸிட் போன்ற முக்கிய உலக நிகழ்வுகளை முன்னறிவித்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு தீர்க்க தரிசியாக மாறினார்.
முன்னதாக 2024ம் ஆண்டுக்காக கணிக்கப்பட்ட கணிப்புகள் உண்மையாகிவிட்டன என்றும் நம்பப்படுகிறது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான அவரது கணிப்பு தற்போது மிகப் பெரும் அளவில் பேசு பொருளாகி வருகிறது.
ஐரோப்பாவில் 2025 ஆம் ஆண்டில் மிகப்பெரிய போர் ஒன்று துவங்கும் என்றும் இதனால் உலகம் முழுவதும் உயிரிழப்புக்கள் மற்றும் பொருளாதார இழப்புகள் அதிக அளவில் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உலக அளவில் வலுவான தலைவராக உருவெடுப்பார் .
2025 ஆம் ஆண்டு உலக போர் ஏற்படுவதற்கான துவக்கமாக இருக்கும் . 2043 ஆம் ஆண்டு ஐரோப்பா முஸ்லிம்களின் ஆட்சிக்கு அடிபணியும்.
2076 ஆம் ஆண்டு மீண்டும் கம்யூனிசம் உலக அளவில் உருவெடுக்கும். 5079 ஆண்டில் மனித இனம் மொத்தமாக பூமியிலிருந்து அழிந்து விடும் எனவும் அவர் கணித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan