Paristamil Navigation Paristamil advert login

வெற்றிகரமாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை செய்த வட கொரியா

வெற்றிகரமாக ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை  செய்த வட கொரியா

7 தை 2025 செவ்வாய் 08:59 | பார்வைகள் : 3673


பசிபிக் கடலில்  புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக வட கொரியா சோதனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த ஏவுகணை பசிபிக் பகுதியில் உள்ள தொலைவான இலக்குகளை தாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏவுகணை 1,500 கிலோமீட்டர் (932 மைல்கள்) தூரத்தை கடந்து 12 மடங்கு ஒலியின் வேகத்தில் பசிபிக் கடலில் இலக்கை தாக்கியதாக, வட கொரியாவின் KCNA தகவல் வெளியிடப்பட்டது.

வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன், இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை அமைப்பை "எதிராளிகளுக்கு எதிராக பாதுகாப்பை உறுதிசெய்யும் முக்கிய சாதனை" எனக் குறிப்பிட்டார்.


மேலும், "எதிரிகளின் பலவகையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிக்க, அணு ஆயுதங்களை அதிகரிக்கவேண்டும்" என்றார். 

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், இந்த ஏவுகணை சோதனை ஐ.நா. பாதுகாப்பு மன்ற தீர்மானங்களுக்கு விரோதமாகும் எனக் கண்டித்துள்ளார்.

மேலும், வட கொரியா-ரஷ்யாவின் இருதரப்புப் பகிர்வுகள், குறிப்பாக உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கான வட கொரியாவின் ஆதரவு, ஆபத்தானதாக உள்ளது என்று எச்சரித்துள்ளார்.

வட கொரியாவின் ரஷ்ய இணக்கம், ஆயுத தொழில்நுட்ப பகிர்வு மூலம் அணு ஆயுத ஏவுகணைகளை மேம்படுத்த வாய்ப்பளிக்கலாம் என சர்வதேச நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.   

இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை, வட கொரியாவின் உள்நாட்டுக் கையாள்வு மற்றும் அண்டை நாடுகள் மீது அதன் ஆதிக்கம் செலுத்தும் முயற்சிகளை வெளிப்படுத்துகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்