பரிசில் காணாமல் போன பிரேஸில் புகைப்படக்கலைஞர்.. சென் நதியில் சடலம் மீட்பு!!
11 தை 2025 சனி 18:14 | பார்வைகள் : 6600
பரிசுக்கு சுற்றுலா வந்த பிரேஸில் நாட்டைச் சேர்ந்த புகைப்படக்கலைஞரான Flávio de Castro Sousa, சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களாக அவர் காணாமல் போயிருந்தார். 36 வயதுடைய Flávio de Castro Sousa, ஜனவரி 4 ஆம் திகதி சென் நதியில் சடலமாக மிதந்ததை அடுத்து, காவல்துறையினரால் சடலம் மீட்கப்பட்டது.
ஒன்றரை மாதங்களின் பின்னர் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பல்வேறு கோணங்களில் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சென் நதியில் தள்ளிவிடப்பட்டாரா அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா என்பது தொடர்பாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.


























Bons Plans
Annuaire
Scan